நிகழ்வு-செய்தி

25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 73 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு அஞ்சலி செலுத்தியது

73 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (2021 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆயுத அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் கசுன் பிரகீத்வினால் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வுக்காக கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சமிந்த கருனாசேன மற்றும் நிர்வாக அதிகாரி பன்டார வாஹல ஆகியோர் கலந்து கொண்டனர்.

04 Feb 2021

73 வது தேசிய சுதந்திர தினத்தில் கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

73 ஆவது சுதந்திர தின விழா இன்று (2021 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2021